December 16, 2009

நான்

வெயில் காலங்களில் நீ
சிந்தும் வியர்வை நான்

மழை காலங்களில் உனை
மறைக்கும் குடை நான்

குளிர் காலங்களில் உனை
காக்கும் கம்பளி நான்

மரண நேரத்தில் நீ
துறக்கும் உயிர் நான்

August 10, 2009

பிடிக்கும்

என்னை உனக்குப்
பிடிக்கும்
என்பதாலேயே

என்னை எனக்கும்
பிடிக்கும்

August 6, 2009

அழைத்தவள் அவள்

நீ சொல்லி
கூப்பிட்ட பிறகுதான்

என்
பெயரே
எனக்குப்
பிடித்துப்போனது

August 4, 2009

அவள் திருமணம்

கனத்த பரிசுடன்
வந்துவிட்டு
கனத்த மனசுடன்
திரும்பிச் செல்கிறேன்

உன் திருமணத்திற்கு
வந்த நான்...

July 29, 2009

காதல் விஷம்

உயிர் கொல்லும் விஷத்தை
தனக்குள்ளே வைத்துக்கொண்டு
வாழ்கிறது நாகம்

மனம் கொல்லும் காதலை
எனக்குள்ளே வைத்துக்கொண்டு
வாழ்கிறேன் நானும்

சொல்லாத காதல்
விஷம்
சுவைக்கின்ற விஷம்
காதல்

சொல்லாத காதல்

உன்னிடம் சொல்லவில்லை
என்பதாலோ என்னவோ

இப்போதெல்லாம்
என்னிடம் பேசுவதேயில்லை

உன் மீது நான் கொண்ட‌
காதல் !

July 22, 2009

களவு

உரிமையாளன்
நான்

களவு போன இடம்
கடற்கரை

களவு போன நேரம்
மாலை மணி 6

களவான பொருள்
இதயம்

திருடியது
அவள்

யாரவள்? ...தேவதை

வந்து கலந்தனள் ‍- ‍என்
வாழ்வு புகுந்தனள்

நெஞ்சில் நிறைந்தனள் ‍- ‍என்
நினைவில் நிலைத்த‌னள்

அன்பு காட்டினள் - ‍என்
ஆயுள் கூட்டினள்

கனவில் வந்த‌னள் - ‍உயிர்
காதல் தந்த‌னள்

காலம் வசந்தமாய்
கடந்த நேரத்தில்.....

ஓர் நாள்...
கண்மணி தாமரை அவள்
கதறும் மனம் ஈந்து...

காற்றில் கலந்த‌னள் ‍- ‍என்
கண்ணில் மறைந்த‌னள்

இனியவள் எனக்கு
இனி அவள்?
யாரவள்?

கேள்விகள் கணைகளாய்
இதயம் துளைத்தன

ஊர் சிரித்தது
உலகம் பழித்தது ‍- என்
ஆவி சலித்தது

நாட்கள் நகர்ந்தன‌
சரியும் என்னுயிர் கண்டு
பதில் தந்தன‌

"வந்து கலப்பதும்
வாழ்வு புகுவதும்
கண்ணில் மறைவதும் பின்
காற்றில் கரைவதும்
தேவதை இயல்பு"

June 29, 2009

அவமானம்

ஒரு அவமானம் ‍‍- நூறு
மரணத்திற்கு சமம்

April 7, 2009

காதல்

நீ மறந்தாய்.

நான் இறந்தேன்.

உயிரோடிருக்கிறது
உயிர் மட்டும்.