வெயில் காலங்களில் நீ
சிந்தும் வியர்வை நான்
மழை காலங்களில் உனை
மறைக்கும் குடை நான்
குளிர் காலங்களில் உனை
காக்கும் கம்பளி நான்
மரண நேரத்தில் நீ
துறக்கும் உயிர் நான்
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!