July 29, 2009

காதல் விஷம்

உயிர் கொல்லும் விஷத்தை
தனக்குள்ளே வைத்துக்கொண்டு
வாழ்கிறது நாகம்

மனம் கொல்லும் காதலை
எனக்குள்ளே வைத்துக்கொண்டு
வாழ்கிறேன் நானும்

சொல்லாத காதல்
விஷம்
சுவைக்கின்ற விஷம்
காதல்

சொல்லாத காதல்

உன்னிடம் சொல்லவில்லை
என்பதாலோ என்னவோ

இப்போதெல்லாம்
என்னிடம் பேசுவதேயில்லை

உன் மீது நான் கொண்ட‌
காதல் !

July 22, 2009

களவு

உரிமையாளன்
நான்

களவு போன இடம்
கடற்கரை

களவு போன நேரம்
மாலை மணி 6

களவான பொருள்
இதயம்

திருடியது
அவள்

யாரவள்? ...தேவதை

வந்து கலந்தனள் ‍- ‍என்
வாழ்வு புகுந்தனள்

நெஞ்சில் நிறைந்தனள் ‍- ‍என்
நினைவில் நிலைத்த‌னள்

அன்பு காட்டினள் - ‍என்
ஆயுள் கூட்டினள்

கனவில் வந்த‌னள் - ‍உயிர்
காதல் தந்த‌னள்

காலம் வசந்தமாய்
கடந்த நேரத்தில்.....

ஓர் நாள்...
கண்மணி தாமரை அவள்
கதறும் மனம் ஈந்து...

காற்றில் கலந்த‌னள் ‍- ‍என்
கண்ணில் மறைந்த‌னள்

இனியவள் எனக்கு
இனி அவள்?
யாரவள்?

கேள்விகள் கணைகளாய்
இதயம் துளைத்தன

ஊர் சிரித்தது
உலகம் பழித்தது ‍- என்
ஆவி சலித்தது

நாட்கள் நகர்ந்தன‌
சரியும் என்னுயிர் கண்டு
பதில் தந்தன‌

"வந்து கலப்பதும்
வாழ்வு புகுவதும்
கண்ணில் மறைவதும் பின்
காற்றில் கரைவதும்
தேவதை இயல்பு"