உயிர் கொல்லும் விஷத்தை
தனக்குள்ளே வைத்துக்கொண்டு
வாழ்கிறது நாகம்
மனம் கொல்லும் காதலை
எனக்குள்ளே வைத்துக்கொண்டு
வாழ்கிறேன் நானும்
சொல்லாத காதல்
விஷம்
சுவைக்கின்ற விஷம்
காதல்
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!
July 29, 2009
சொல்லாத காதல்
உன்னிடம் சொல்லவில்லை
என்பதாலோ என்னவோ
இப்போதெல்லாம்
என்னிடம் பேசுவதேயில்லை
உன் மீது நான் கொண்ட
காதல் !
என்பதாலோ என்னவோ
இப்போதெல்லாம்
என்னிடம் பேசுவதேயில்லை
உன் மீது நான் கொண்ட
காதல் !
July 22, 2009
யாரவள்? ...தேவதை
வந்து கலந்தனள் - என்
வாழ்வு புகுந்தனள்
நெஞ்சில் நிறைந்தனள் - என்
நினைவில் நிலைத்தனள்
அன்பு காட்டினள் - என்
ஆயுள் கூட்டினள்
கனவில் வந்தனள் - உயிர்
காதல் தந்தனள்
காலம் வசந்தமாய்
கடந்த நேரத்தில்.....
ஓர் நாள்...
கண்மணி தாமரை அவள்
கதறும் மனம் ஈந்து...
காற்றில் கலந்தனள் - என்
கண்ணில் மறைந்தனள்
இனியவள் எனக்கு
இனி அவள்?
யாரவள்?
கேள்விகள் கணைகளாய்
இதயம் துளைத்தன
ஊர் சிரித்தது
உலகம் பழித்தது - என்
ஆவி சலித்தது
நாட்கள் நகர்ந்தன
சரியும் என்னுயிர் கண்டு
பதில் தந்தன
"வந்து கலப்பதும்
வாழ்வு புகுவதும்
கண்ணில் மறைவதும் பின்
காற்றில் கரைவதும்
தேவதை இயல்பு"
வாழ்வு புகுந்தனள்
நெஞ்சில் நிறைந்தனள் - என்
நினைவில் நிலைத்தனள்
அன்பு காட்டினள் - என்
ஆயுள் கூட்டினள்
கனவில் வந்தனள் - உயிர்
காதல் தந்தனள்
காலம் வசந்தமாய்
கடந்த நேரத்தில்.....
ஓர் நாள்...
கண்மணி தாமரை அவள்
கதறும் மனம் ஈந்து...
காற்றில் கலந்தனள் - என்
கண்ணில் மறைந்தனள்
இனியவள் எனக்கு
இனி அவள்?
யாரவள்?
கேள்விகள் கணைகளாய்
இதயம் துளைத்தன
ஊர் சிரித்தது
உலகம் பழித்தது - என்
ஆவி சலித்தது
நாட்கள் நகர்ந்தன
சரியும் என்னுயிர் கண்டு
பதில் தந்தன
"வந்து கலப்பதும்
வாழ்வு புகுவதும்
கண்ணில் மறைவதும் பின்
காற்றில் கரைவதும்
தேவதை இயல்பு"
Subscribe to:
Posts (Atom)