April 21, 2014

தேவ மின்னல்

தேவ மின்னல்
திரும்பி வருமா...

பாதை பார்த்தபடி
பார்வை பூத்தபடி
பழியாய் கிடக்கிறது
என் வானம்.

வரவில்லை

இன்றுவரை
வரவில்லை.

இனி வருவதற்கு
வாய்ப்பு உண்டா
தெரியவில்லை.

வராதது ஏனோ
அறியவில்லை.

காணாது
வாடிக் கிடக்கும்
உயிர்ப்பறவை

தேடிப் பறந்திடுமோ
புரியவில்லை.

தேவனுக்கே
வெளிச்சம்.

நீ என்
வாழ்வில் வந்த
அனிச்சம்.

April 10, 2014

நான்

நீரற்ற குளம்
தாண்டும்
தாகங் கொண்ட
பறவையாய்...

நீயற்ற இடம்
தாண்டும்
நான்.

நிலா கவிதை 4

நிலவில்லாத
நாளெல்லாம்
பூமிக்கு
அமாவாசை.

நீயில்லாத
நாளெல்லாம்
எனக்கு
அமாவாசை.

April 6, 2014

ரோஜா

ரோஜாப் பூவை
செடியில்
பார்த்ததுண்டு.

சுடியில்
பார்த்தேன் இன்று.

April 2, 2014

அகராதி

இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

உன்
விழிக்குறிப்பை
மொழிபெயர்க்கும்
அகராதியை.....
 

எரிச்சல்

மின்தூக்கியில்
உன்னோடு
வரும்போது
எரிச்சலாய்
இருக்கிறது

ஏன்
மூன்றாம் மாடியில்
உட்கார்ந்திருக்கிறோம்
என்று.