April 23, 2015

விசித்திரம்

பிரிந்து நீ போன போதே
இறந்து நான் போனதையே
மறந்து போய்
உயிரோடிருக்கிறேனே.

இதென்ன
விசித்திரம்?

April 20, 2015

காதல்கள்

மணந்த காதல் போல்
மறந்த காதல் போல்
மரித்த காதல் போல்
மண்ணில் உண்டு -

மறைத்த காதல் –
மனதை மனதால்
மதித்த காதல் - தன்
மனதிற்கு
மட்டுமே கேட்கும்படி
உரைத்த காதல்.

என்னாவது?

வானமே இல்லையே.
வான்நிலா என்னாவது?
வருவதா போவதா
கேள்விகள் உண்டானது.

தீபமே இல்லையே.
திரிகளும் என்னாவது?
எரிவதா தணிவதா
கேள்விகள் உண்டானது.

வண்ணமே இல்லையே.
வானவில் என்னாவது?
வளைவதா கலைவதா
கேள்விகள் உண்டானது.

ஆழ்கடல் இல்லையே.
அலைகளும் என்னாவது?
அலைவதா மறைவதா
கேள்விகள் உண்டானது.

தேவியே இல்லையே.
கோவிலும் என்னாவது?
திறப்பதா அடைப்பதா
கேள்விகள் உண்டானது.

ஜீவனே இல்லையே.
தேகமும் என்னாவது?
வாழ்வதா வீழ்வதா
கேள்விகள் உண்டானது.

வாழ்வே!
இனி நீ
இல்லையே.

வாழ்வில்
இனி நான்
இல்லையே.

காதல் எனும்
வேதம் தினம்
பாடும் - என்
பாடலே.

April 17, 2015

கவிதை வராது

இன்று முதல்
என் கவிதை
வராது.

இன்று முதல்
என் 
கவிதை
வராது.