September 26, 2017

கடந்த பல ஆண்டுகளாக என்னுடைய இந்த Blogspot மற்றும் முகநூலில் நான் எழுதிய கவிதைகளை தொகுத்து உருவாக்கிய புத்தகம் (only one book!). வாசித்துவிட்டு எனக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த தோழர்களுக்கு நன்றிகள்.


May 6, 2015

நானுணர்வது

நீயின்றி
நானுணர்வது
என் தனிமையையா?
என் வெறுமையையா?

April 23, 2015

விசித்திரம்

பிரிந்து நீ போன போதே
இறந்து நான் போனதையே
மறந்து போய்
உயிரோடிருக்கிறேனே.

இதென்ன
விசித்திரம்?

April 20, 2015

காதல்கள்

மணந்த காதல் போல்
மறந்த காதல் போல்
மரித்த காதல் போல்
மண்ணில் உண்டு -

மறைத்த காதல் –
மனதை மனதால்
மதித்த காதல் - தன்
மனதிற்கு
மட்டுமே கேட்கும்படி
உரைத்த காதல்.

என்னாவது?

வானமே இல்லையே.
வான்நிலா என்னாவது?
வருவதா போவதா
கேள்விகள் உண்டானது.

தீபமே இல்லையே.
திரிகளும் என்னாவது?
எரிவதா தணிவதா
கேள்விகள் உண்டானது.

வண்ணமே இல்லையே.
வானவில் என்னாவது?
வளைவதா கலைவதா
கேள்விகள் உண்டானது.

ஆழ்கடல் இல்லையே.
அலைகளும் என்னாவது?
அலைவதா மறைவதா
கேள்விகள் உண்டானது.

தேவியே இல்லையே.
கோவிலும் என்னாவது?
திறப்பதா அடைப்பதா
கேள்விகள் உண்டானது.

ஜீவனே இல்லையே.
தேகமும் என்னாவது?
வாழ்வதா வீழ்வதா
கேள்விகள் உண்டானது.

வாழ்வே!
இனி நீ
இல்லையே.

வாழ்வில்
இனி நான்
இல்லையே.

காதல் எனும்
வேதம் தினம்
பாடும் - என்
பாடலே.

April 17, 2015

கவிதை வராது

இன்று முதல்
என் கவிதை
வராது.

இன்று முதல்
என் 
கவிதை
வராது.

March 29, 2015

கண்ணீர் முகிலாய்...


ஏதோ ஒரு ராகம்
மனசின் உள்வீணையில்.
ஏனோ விழி நீரில்
நனைகின்ற ஜீவநாதம்.

தளரும் மனதோடு...
இடரும் நினைவோடு...

உயிர் காற்றாடும் சங்கே
உயிர் மீட்டாது வந்தே.

காற்றில் மின்னி மாயும் - விளக்கில்
ஏற்றி வைக்கும் தீபம்.
கங்கை ஆற்றில் எங்கு - கலக்கும்
வைகை ஆற்றின் நீரும்?

புனித யாத்ரை விரதம் போலே
பிரிவில் வாட்டும் விரகம்.

இருளில் பறந்து மொழி மாற்றிப் பாடுமொரு
பாவம் ஊமை குயிலாய்
நான்.

வெண்ணிலாவைப் போலே எனக்குள்
வெளிச்சம் தந்ததாரோ?

வர்ண ஜாலம் காட்டி வசந்தம்
வாங்கிப் போனதாரோ?

அன்பின் ஆத்ம ஹிருதயம் தேம்பும்
சிறகொடிந்த கிளியாய்.

மழை பெய்ய மண்ணில் அலை பாய்ந்து தேடுமொரு
பாவம் கண்ணீர் முகிலாய்
நான்.

March 12, 2015

பூஜைக்காக

பூஜை செய்ய
பூக்கள் வேண்டும்.

கொஞ்சம்
புன்னகை செய்
பூவே.

March 7, 2015

நாழிகைகள்

நீ
இல்லாமல்
நகர்கின்றன

என்
நாழிகைகள்.

March 6, 2015

காலம்

காலம் தாழ்த்தினால்
காதல் கருகிவிடும்.

உயிர் கொஞ்சம்
உள்ளே உருகிவிடும்.

நீ
தந்த பாடமடி.