கவிதைக்காலம்
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!
May 6, 2015
April 23, 2015
விசித்திரம்
பிரிந்து நீ போன போதே
இறந்து நான் போனதையே
மறந்து போய்
உயிரோடிருக்கிறேனே.
இதென்ன
விசித்திரம்?
இறந்து நான் போனதையே
மறந்து போய்
உயிரோடிருக்கிறேனே.
இதென்ன
விசித்திரம்?
April 20, 2015
காதல்கள்
மணந்த காதல் போல்
மறந்த காதல் போல்
மரித்த காதல் போல்
மண்ணில் உண்டு -
மறைத்த காதல் –
மனதை மனதால்
மதித்த காதல் - தன்
மனதிற்கு
மட்டுமே கேட்கும்படி
உரைத்த காதல்.
மறந்த காதல் போல்
மரித்த காதல் போல்
மண்ணில் உண்டு -
மறைத்த காதல் –
மனதை மனதால்
மதித்த காதல் - தன்
மனதிற்கு
மட்டுமே கேட்கும்படி
உரைத்த காதல்.
என்னாவது?
வானமே இல்லையே.
வான்நிலா என்னாவது?
வருவதா போவதா
கேள்விகள் உண்டானது.
தீபமே இல்லையே.
திரிகளும் என்னாவது?
எரிவதா தணிவதா
கேள்விகள் உண்டானது.
வண்ணமே இல்லையே.
வானவில் என்னாவது?
வளைவதா கலைவதா
கேள்விகள் உண்டானது.
ஆழ்கடல் இல்லையே.
அலைகளும் என்னாவது?
அலைவதா மறைவதா
கேள்விகள் உண்டானது.
தேவியே இல்லையே.
கோவிலும் என்னாவது?
திறப்பதா அடைப்பதா
கேள்விகள் உண்டானது.
ஜீவனே இல்லையே.
தேகமும் என்னாவது?
வாழ்வதா வீழ்வதா
கேள்விகள் உண்டானது.
வாழ்வே!
இனி நீ
இல்லையே.
வாழ்வில்
இனி நான்
இல்லையே.
காதல் எனும்
வேதம் தினம்
பாடும் - என்
பாடலே.
வான்நிலா என்னாவது?
வருவதா போவதா
கேள்விகள் உண்டானது.
தீபமே இல்லையே.
திரிகளும் என்னாவது?
எரிவதா தணிவதா
கேள்விகள் உண்டானது.
வண்ணமே இல்லையே.
வானவில் என்னாவது?
வளைவதா கலைவதா
கேள்விகள் உண்டானது.
ஆழ்கடல் இல்லையே.
அலைகளும் என்னாவது?
அலைவதா மறைவதா
கேள்விகள் உண்டானது.
தேவியே இல்லையே.
கோவிலும் என்னாவது?
திறப்பதா அடைப்பதா
கேள்விகள் உண்டானது.
ஜீவனே இல்லையே.
தேகமும் என்னாவது?
வாழ்வதா வீழ்வதா
கேள்விகள் உண்டானது.
வாழ்வே!
இனி நீ
இல்லையே.
வாழ்வில்
இனி நான்
இல்லையே.
காதல் எனும்
வேதம் தினம்
பாடும் - என்
பாடலே.
April 17, 2015
March 29, 2015
கண்ணீர் முகிலாய்...
ஏதோ ஒரு ராகம்
மனசின் உள்வீணையில்.
ஏனோ விழி நீரில்
நனைகின்ற ஜீவநாதம்.
தளரும் மனதோடு...
இடரும் நினைவோடு...
உயிர் காற்றாடும் சங்கே
உயிர் மீட்டாது வந்தே.
காற்றில் மின்னி மாயும் - விளக்கில்
ஏற்றி வைக்கும் தீபம்.
கங்கை ஆற்றில் எங்கு - கலக்கும்
வைகை ஆற்றின் நீரும்?
புனித யாத்ரை விரதம் போலே
பிரிவில் வாட்டும் விரகம்.
இருளில் பறந்து மொழி மாற்றிப் பாடுமொரு
பாவம் ஊமை குயிலாய்
நான்.
வெண்ணிலாவைப் போலே எனக்குள்
வெளிச்சம் தந்ததாரோ?
வர்ண ஜாலம் காட்டி வசந்தம்
வாங்கிப் போனதாரோ?
அன்பின் ஆத்ம ஹிருதயம் தேம்பும்
சிறகொடிந்த கிளியாய்.
மழை பெய்ய மண்ணில் அலை பாய்ந்து தேடுமொரு
பாவம் கண்ணீர் முகிலாய்
நான்.
March 12, 2015
March 7, 2015
March 6, 2015
Subscribe to:
Posts (Atom)