ஏதோ ஒரு ராகம்
மனசின் உள்வீணையில்.
ஏனோ விழி நீரில்
நனைகின்ற ஜீவநாதம்.
தளரும் மனதோடு...
இடரும் நினைவோடு...
உயிர் காற்றாடும் சங்கே
உயிர் மீட்டாது வந்தே.
காற்றில் மின்னி மாயும் - விளக்கில்
ஏற்றி வைக்கும் தீபம்.
கங்கை ஆற்றில் எங்கு - கலக்கும்
வைகை ஆற்றின் நீரும்?
புனித யாத்ரை விரதம் போலே
பிரிவில் வாட்டும் விரகம்.
இருளில் பறந்து மொழி மாற்றிப் பாடுமொரு
பாவம் ஊமை குயிலாய்
நான்.
வெண்ணிலாவைப் போலே எனக்குள்
வெளிச்சம் தந்ததாரோ?
வர்ண ஜாலம் காட்டி வசந்தம்
வாங்கிப் போனதாரோ?
அன்பின் ஆத்ம ஹிருதயம் தேம்பும்
சிறகொடிந்த கிளியாய்.
மழை பெய்ய மண்ணில் அலை பாய்ந்து தேடுமொரு
பாவம் கண்ணீர் முகிலாய்
நான்.