March 2, 2015

பெண்ணிலா

வந்து போகும் வெண்ணிலா
என்னை பார்ப்பதுண்டு.

கண்கள் பார்த்த பெண்ணிலா
நின்று போனதின்று.

நான் செய்த பாவமே
என்ன செய்கிறாய்?

ஏழேழு ஜென்மமாய்
என்னைக் கொல்கிறாய்.

ராகம் எங்கு போனது?
தாளம் என்ன ஆனது?

ஊமை தானே
உருகிப் பாடுது.

ஊமை உள்ளம்
உயிரைத்தானே தேடுது.