March 29, 2014

நிலா கவிதை 3

வீண்தான்.

நிலவில்லாத
வானும்.

நீயில்லாத
நானும்.

March 28, 2014

ஒரப்பார்வை

என்னுள்
தாமரையாய் பூத்தவளே.

நான்
தாமதமாய் பார்த்தவளே.

உனக்கென்ன
ஒரப்பார்வையில்
கொன்றுவிட்டு போவாய்.

எமனை நான்
வென்றுவிட்டு வாழ்கிறேன்.

கல்நெஞ்சக்காரி

216 தமிழ்
எழுத்துக்கள்.

26 ஆங்கில
எழுத்துக்கள். 

இதில் ஏதேனும்
ஒன்றையாவது
பேசக்கூடாதா
என்னிடம். 

போடி - என்
உள்நெஞ்சம் புரியாத
கல்நெஞ்சக்காரி.

நீயின்றி...

நீரின்றி அமையாது
எந்த உலகும்.

நீயின்றி அமையாது
எந்தன் உலகம்.

நிலா கவிதை 2

அலுவலகம் விட்டு
9.40க்கே
நிலா
நகர்ந்து போயிற்று.

என் வானம்
இருண்டு போயிற்று.

நிலா கவிதை 1

மஞ்சள் நிலா

இன்று
வானில் வரவில்லை.

நேரில்
வந்திருக்கிறது.

March 25, 2014

வாழ்க மின்தூக்கி

அவளை தனக்குள்
சுமந்து
மிதந்து வந்தது
மின்தூக்கி.

கூடவே
அவளை நெஞ்சில்
சுமந்து நிற்கும்
நான்.

(மின்தூக்கி = Lift)

March 24, 2014

திரும்பிய உயிர்

என் உயிர்
வந்துவிட்டது.

எனக்கு உயிர்
வந்துவிட்டது.

March 20, 2014

வார விடுமுறை

வாரத்தின்
இறுதி நாட்கள்
வந்துவிட்டால்...

எல்லோருக்கும்
கொண்டாட்டம்.

எனக்கு மட்டும்
திண்டாட்டம்.

இரண்டு நாட்கள்
உன்னை
பார்க்க முடியாதே...

வெறுமை

வெறுமை.

நீ இல்லாத
உன் இடத்திலும்.

அதை பார்க்கும்
என் இதயத்திலும்.

March 14, 2014

ஃபேஸ்புக்கும் டாஸ்மாக்கும்

ஃபேஸ்புக்கும் டாஸ்மாக்கும்
ஒட்டிப் பிறக்காத
இரட்டை குழந்தைகள்

முகங்கள் வேறு
குணம் ஒன்று

இரண்டிலும் ஆர்வம்
சொல்லிவிட்டு
வருவதில்லை என்பதே
சுவாரஸ்யம்

நேரம் திருடுவது
ஒன்றின் லட்சியம்
பணம் பறித்தல்
இன்னொன்றின்
லட்சியம்

இரண்டின் ராஜாங்கத்திலும்
வயது வரம்பில்லை

உள்ளே நுழைதல்
முதல் நிலை
தன்னை மறத்தல்
இறுதி நிலை

இரண்டுமே
கால தேச தூர
வர்த்தமானங்களை
கடந்து நிற்பவை

இவ்விரண்டில் நுழைந்துவிட்டால்
எவர் பேச்சும்
செவியேறாது

இரண்டின்
தேசிய குணமும்
சண்டைதான்

இவ்விரண்டில்
புதைந்துவிட்டால்
மீளுதல் கடினம்

இரண்டிலும்
நட்பு எண்ணிக்கை
அதிகம்

இரண்டுமே
மனம் சார்ந்து
நேர்ந்தாகும்
அஞ்ஞான விபத்து

இரண்டிலும்
வாய்ச்சண்டைக்கு
குறைவில்லை

இரண்டோடும்
உறவாட
விரல்கள் அவசியம்

இரண்டிற்கும்
விடுமுறை என்றால்
மானுடம் ஸ்தம்பிக்கும்

இரண்டுமே
சமதர்மம் உலாவும்
சன்மார்க்க தளங்கள்

என்ன வேறுபாடு?

ஒன்று
உடல் உருக்கும்
மற்றொன்று
மனம் பறிக்கும்

(Inspiration: கவிஞர் வைரமுத்து எழுதிய 'காதலும் மரணமும்' என்கிற கவிதை)