July 22, 2009

யாரவள்? ...தேவதை

வந்து கலந்தனள் ‍- ‍என்
வாழ்வு புகுந்தனள்

நெஞ்சில் நிறைந்தனள் ‍- ‍என்
நினைவில் நிலைத்த‌னள்

அன்பு காட்டினள் - ‍என்
ஆயுள் கூட்டினள்

கனவில் வந்த‌னள் - ‍உயிர்
காதல் தந்த‌னள்

காலம் வசந்தமாய்
கடந்த நேரத்தில்.....

ஓர் நாள்...
கண்மணி தாமரை அவள்
கதறும் மனம் ஈந்து...

காற்றில் கலந்த‌னள் ‍- ‍என்
கண்ணில் மறைந்த‌னள்

இனியவள் எனக்கு
இனி அவள்?
யாரவள்?

கேள்விகள் கணைகளாய்
இதயம் துளைத்தன

ஊர் சிரித்தது
உலகம் பழித்தது ‍- என்
ஆவி சலித்தது

நாட்கள் நகர்ந்தன‌
சரியும் என்னுயிர் கண்டு
பதில் தந்தன‌

"வந்து கலப்பதும்
வாழ்வு புகுவதும்
கண்ணில் மறைவதும் பின்
காற்றில் கரைவதும்
தேவதை இயல்பு"