May 26, 2014

மகரந்த மாற்றம்

உன்
பார்வை
படும்போதெல்லாம்

கண நேரத்தில்
என்னுள் நேர்ந்திடும்
மகரந்த மாற்றம்
விவரிக்க

வார்த்தைகளே இல்லை
என்னிடம்.

அந்நேரம்

புலன்கள் அடங்கிட
ஊமையாகிறேன்
பூமியில் அசையாத
ஆமையாகிறேன்.

May 23, 2014

வியர்வைத்துளி

நீ
கடந்து போகையில்
என் மீது தெறித்த
உன் வியர்வைத் துளியால்

கங்கையில் குளிக்காத
தாபம் தீர்ந்தது.

ஜென்ம ஜென்மாந்திர
தாகம் தீர்ந்தது.

முக்காலம்

என் இறந்தகாலம்
அனுபவங்கள்.

என் நிகழ்காலம்
தேடல்கள்.

என் எதிர்காலம்
நீ.

பிரம்மா

படைப்புக் கடவுளான
பிரம்மாவுக்கு
கோயிலே கிடையாதாம்.
ஈசனின் கோபமாம்.
ஏதோ சாபமாம்.

உன்னைப் படைத்ததற்கே
ஓராயிரம் கோயில்
கட்டலாமே.

பூங்காற்று

பூங்காற்றே
அடிக்கடி வீசி

அவள் கேசத்தையும்
என் சுவாசத்தையும்
கலைக்காதே.

காதல் தீபம்

இராக்கால
வானம் போல
இருண்டு கிடக்கிறது
என்
மனக் குகை.

நீ வந்து
காதல் தீபம் ஏற்று.
காரிருளை மாற்று.

May 22, 2014

காலம் 1

சதா சர்வகாலமும்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறேனாம்

என்னிடம் சொல்லிவிட்டு
கன்னம் கிள்ளிவிட்டு
கடந்து போகிறது
காலம்.

கண்டு கொண்டேன்

பூக்களாலும்
பூகம்பம் வெடிக்கும்.
புயல் அடிக்கும்.
பிரளயம் நடக்கும்.

உன்னை
கண்ட பின்பு
கண்டு கொண்டேன்.

May 18, 2014

சுவாசக் காற்று

மரமாய்
பிறந்திருந்தால்
உன் சுவாசக் காற்று
என் சுவாசக் காற்றாய்
ஆகியிருக்கும்.

என்ன செய்ய...

அவசியமில்லாமல்
ஆணானேன்
வீணானேன்

May 9, 2014

கதவு

கதவு தட்டும் காற்றே...
திறந்திருக்கும் கதவு தாண்ட
உனக்கெதற்கு அனுமதி?