March 29, 2015

கண்ணீர் முகிலாய்...


ஏதோ ஒரு ராகம்
மனசின் உள்வீணையில்.
ஏனோ விழி நீரில்
நனைகின்ற ஜீவநாதம்.

தளரும் மனதோடு...
இடரும் நினைவோடு...

உயிர் காற்றாடும் சங்கே
உயிர் மீட்டாது வந்தே.

காற்றில் மின்னி மாயும் - விளக்கில்
ஏற்றி வைக்கும் தீபம்.
கங்கை ஆற்றில் எங்கு - கலக்கும்
வைகை ஆற்றின் நீரும்?

புனித யாத்ரை விரதம் போலே
பிரிவில் வாட்டும் விரகம்.

இருளில் பறந்து மொழி மாற்றிப் பாடுமொரு
பாவம் ஊமை குயிலாய்
நான்.

வெண்ணிலாவைப் போலே எனக்குள்
வெளிச்சம் தந்ததாரோ?

வர்ண ஜாலம் காட்டி வசந்தம்
வாங்கிப் போனதாரோ?

அன்பின் ஆத்ம ஹிருதயம் தேம்பும்
சிறகொடிந்த கிளியாய்.

மழை பெய்ய மண்ணில் அலை பாய்ந்து தேடுமொரு
பாவம் கண்ணீர் முகிலாய்
நான்.

March 12, 2015

பூஜைக்காக

பூஜை செய்ய
பூக்கள் வேண்டும்.

கொஞ்சம்
புன்னகை செய்
பூவே.

March 7, 2015

நாழிகைகள்

நீ
இல்லாமல்
நகர்கின்றன

என்
நாழிகைகள்.

March 6, 2015

காலம்

காலம் தாழ்த்தினால்
காதல் கருகிவிடும்.

உயிர் கொஞ்சம்
உள்ளே உருகிவிடும்.

நீ
தந்த பாடமடி.

மனசு

உன்னை
மறக்கச் சொல்லி

மன்றாடுகிறது
மனசில்லாத மனசு!

தேவ நிமிடங்கள்

தேவதையை பார்த்த
தேவதை கைகோர்த்த

அந்த
தேவ நிமிடங்கள்

மரண பரியந்தமும்
மறக்காது.

தாமரை

என்
இதயத்தின்
தாமரையில்
இருக்கும்
தாமரை
நீ.

March 5, 2015

தவம்

எங்கு நான் 
செல்வது...

உனக்கென 
தவமிருக்க...

நீ பறித்த...

நீ
பறித்த
பூ

என்
இதயம்.

கனவு

நனவாகாத
கனவு
எனத் தெரிந்தே
காண்கிறேன்

உனை நேசிப்பதாய்...

March 2, 2015

இடம் பெயர்ந்தால்

நீ
இடம் விட்டு
இடம் பெயர்ந்தால்

என்
இதயம்
இடம் விட்டு
இடம் பெயரும்.

பெண்ணிலா

வந்து போகும் வெண்ணிலா
என்னை பார்ப்பதுண்டு.

கண்கள் பார்த்த பெண்ணிலா
நின்று போனதின்று.

நான் செய்த பாவமே
என்ன செய்கிறாய்?

ஏழேழு ஜென்மமாய்
என்னைக் கொல்கிறாய்.

ராகம் எங்கு போனது?
தாளம் என்ன ஆனது?

ஊமை தானே
உருகிப் பாடுது.

ஊமை உள்ளம்
உயிரைத்தானே தேடுது.