July 20, 2013

வானம் தொட்டுப் போன வாலி






அயோத்தி புருஷனை
அருகில் காட்டியவன்.
பாண்டவர் பூமியில்
நம்மோடு வசித்தவன்.
நினைவு நாடாக்களால்
நம்மை கட்டியவன்.
வாரந்தோறும் வந்து - நம்
சிந்தைதோறும் சேர்ந்தவன்.
எத்தனையோ பேருக்கு
இரங்கற்பா பாடியவன்.
இவன் பாடும்
இரங்கற்பா கேட்பதற்கே
இறந்து போகலாம்.
இப்பூவுலகம்
மறந்து போகலாம்.
உயிர் பறித்து
உயிர் பறித்து
உயிர் சலித்த எமனுக்கு
கவி சொல்ல எவனுமே
இல்லையென்று
இவனை அழைத்துக்
கொண்டானோ? - எப்படித்தான்
அதற்கு மனம்
கொண்டானோ?

கவிதைக்கெனவே
வாழ்ந்துவிட்ட வாலி.
கலைமகள்
தொலைத்துவிட்ட தாலி.