கல்லூரிக் காலம் முடிந்து
ஆறு ஆண்டுகள்
உனைக் கடைசியாய்
கண்ட நொடிகழிந்து
மூன்று ஆண்டுகள்
கடந்து போயின.
விழியால் பேசிக்கொண்டு
மொழியை மறந்து நின்ற
இறந்தகாலம் எண்ணிமாய்ந்து
மறக்க மறுக்கிறது
காதல் மதங்கொண்ட
மட மனயானை.
உனக்குத் திருமணமானதையும்
வாழ்க்கைத் தேரேறி
துணையோடு நீ போனதையும்
நாள், கிழமை,
நேர சாட்சிகளோடு
நம்பச் சொல்கின்றன
என் நட்பு வட்டங்கள்.
அந்த
வட்டங்கள் சொல்வதே
திட்டவட்ட உண்மையெனும்
நம்பிக்கை மீதான
அவநம்பிக்கையோடு
இப்படி யோசிக்கிறது
யதார்த்தம் மீறி
என் மனம்.
"உன்னோடு
ஒரு எழுத்தேனும்
பேசியிருக்கலாமோ...?"
ஆறு ஆண்டுகள்
உனைக் கடைசியாய்
கண்ட நொடிகழிந்து
மூன்று ஆண்டுகள்
கடந்து போயின.
விழியால் பேசிக்கொண்டு
மொழியை மறந்து நின்ற
இறந்தகாலம் எண்ணிமாய்ந்து
மறக்க மறுக்கிறது
காதல் மதங்கொண்ட
மட மனயானை.
உனக்குத் திருமணமானதையும்
வாழ்க்கைத் தேரேறி
துணையோடு நீ போனதையும்
நாள், கிழமை,
நேர சாட்சிகளோடு
நம்பச் சொல்கின்றன
என் நட்பு வட்டங்கள்.
அந்த
வட்டங்கள் சொல்வதே
திட்டவட்ட உண்மையெனும்
நம்பிக்கை மீதான
அவநம்பிக்கையோடு
இப்படி யோசிக்கிறது
யதார்த்தம் மீறி
என் மனம்.
"உன்னோடு
ஒரு எழுத்தேனும்
பேசியிருக்கலாமோ...?"