July 28, 2013

கனவாய் போன கனவு


சிறுகதை பத்து
கவிதைகள் எழுபது
கதைகள் முப்பது
எழுதி முடித்து...

எழுத்துத் தேரில்
இறுமாப்புடனே
பவனி வந்து...

ஆயிரமாய் ஆண்கள்
லட்சமாய் பெண்கள்
வாசகர்களாகி
வந்து குவிந்து...

வீடுகள் மூன்று
கார்கள் இரண்டு
தோட்டம் ஒன்று
வாங்கிச் சேர்த்து...

இலக்கிய சிங்கம்
எழுத்துச் சிற்பி
கவிதை கோபுரம்
ஞான பீடம்
விருதுகள் வாசலில்
வரிசையாய் நிற்கையில்...

அம்மா அடிக்க...
வலியில் துடித்தெழ...
கனவாய் போனது
கனவு.