December 17, 2014

உனை பிரிந்தால்

இமை மேலே சுமை போலே
உன் நினைவு நடக்கிறதே.

நமை காணும் மழை மேகம்
நனைக்காமல் நகர்கிறதே.

உயிரினிலே ஒரு பாதி
உனைத் தேடி அலைகிறதே.

மறுபாதி உயிர்கூட
மறந்தென்னை பிரிகிறதே.

உயிர் பிரிந்த உடலினிலே
உயிர் வாழும் ஒரு நிமிடம்.

உனை பிரிந்தால் எனதுயிரும்
உடனடியாய் விலகிவிடும்.