December 6, 2014

யார் சொல்வதோ

நான் வந்து
பேசினால்
தவறாய் நீ
நினைப்பாயோ
என
நான் நினைக்கிறேனோ?

நீ வந்து
பேசினால்தான்
நான் பேசுவேன்
என
நீ நினைக்கிறாயோ?

கலங்கி கலங்கி
மனம் நினைக்கிறது.
கண்ணீர் எனை
தினம் நனைக்கிறது.