January 30, 2015

பிரிவதேனோ

உயரமான கவிதை ஒன்று
உலகம் தாண்டி போகுதே...

துயரமான இதயம் ஒன்று
துகள்களாகிப் போனதே...

பகலும் போகுதே
இரவும் போகுதே
நீரில் கண்களும்
மூழ்குதே...

மனமும் தேயுதே
மயங்கி சாயுதே
மரணம் போலது
வாட்டுதே...

உயிரே!
உயிரே!
பிரிவதேனோ....

எனது நிலவும்
எரிவதேனோ...

நினைவே!
நினைவே!
மறந்ததேனோ...

எனது அமுதம்
விஷமேதானோ...

January 29, 2015

உடைந்தது ஒரு உள்ளம்

தீயில்லை
ஒளியில்லை
இந்த யுகமும்
இருளென
ஆனதே.

நீயில்லை
உயிரில்லை
ஒரு ஜீவன்
வாடியே
போனதே.

ஜென்ம ஜென்மமாய்
தவிக்கிறேன்.

உன்னை
இழந்துமே
இருக்கிறேன்.

எண்ணம்
எங்கும்
உன்னை
வைப்பேன்
வானே.

January 27, 2015

காலடி ஒசை

காதலின்
காலடி ஒசை
கேட்கிறதே.

நீ
வருகிறாயோ?

January 23, 2015

என்போல்

நீயும் இங்கே 
இல்லையே.

நானும் என்போல் 
இல்லையே.

நகரும் நரகம்
காலமே.

கனவை மிதித்து
போகுமே.

கணங்கள் ரணமாய்
ஆகுமே.

தினங்கள் யுகமாய்
போகுமே.

January 20, 2015

திரைப்பாடல் 5

My own lyrics for the song UNKKENNA VENUM SOLLU from movie ENNAI ARINDHAAL...

முதல்வரி காதல் சொல்லும்
மறுவரி கவிதை சொல்லும்
இதுவரை நேராத
ஏதோ நேருமே.

விழிவழி காதல் பொங்கும்
மொழிவழி மெளனம் தங்கும்
கனிமொழி பாராத
கண்ணும் சோருமே.

கருவினில் பிறந்து வந்து
தெருவினில் நடந்து செல்லும்
ஒரு வரி கவிதை இங்கு
பெண்ணே நீதானே.

மழையென தூறிக் கொண்டு
மனதினை வாரிக் கொண்டு
மறைகின்ற காற்று இங்கு
பெண்ணே நீதானே.

உன்னை பார்க்கும் மதிய நேரம்
நெஞ்சம் வார்க்கும் புதிய ஈரம்.

நீ நிலவு எனக்கு தூரம்
உந்தன் நிழலே எனக்கு போதும்.

----

இருக்கின்ற ஒரு இதயம்
இழக்கின்ற நொடி கடினம்
இருப்பினும் அது நிகழும்
உன்னைக் கண்டாலே.

இயக்கங்கள் விலகிச் செல்ல
தயக்கங்கள் தழுவிக் கொள்ள
மயக்கங்கள் உயிரை கிள்ளும்
உன்னைக் கண்டாலே.

நீ செல்லும் வழியெல்லாம்
நினைவுகள் ஓடும் ஓ...
நீ சென்ற பின்னாலும்
இமைகளும் தேடும்...

தன தாரனத்தரநம்தம்...
தன தாரனத்தரநம்தம்...

January 16, 2015

திரைப்பாடல் 4

My own lyrics for the song MERUSALAYITEN from movie ‘I’….  :) :) :)

ஏண்டி என்ன கிராஸு பண்ண...
நானும் இப்போ கிராக்கு ஆனேன் பொண்ணே...
டாவடிச்சேன் உன்ன நீ டார்ச்சர் பண்ணியே
சாவடிச்ச என்ன....

நான் 
மெண்டலாயிட்டேன்
மெண்டலாயிட்டேன்
மெண்டலாயிட்டேன்
மெண்டலாயிட்டேன்

Stanza 1:

போட்டோ ஷாப்பு நீ
குவாட்டர் ஷாப்பு நான்
உள்ளுக்குள்ள உன்ன வச்சி
பூட்டிகிட்டேனே...

கோகோ கோலா நீ
கோலி சோடா நான்
பாட்டிலுக்குள் பளிங்குபோல
மாட்டிகிட்டேனே...

நீ ஈசியாரு ரோடு...
நான் ஏலம் போன வீடு...

Stanza 2:

ஜாதிமல்லி நீ
பூந்தமல்லி நான்
வாசனையும் நெஞ்சுக்குள்ள
வண்டி ஓட்டுதே

ஃபேஸுபுக்கு நீ
லூசுமக்கு நான்
லைக்கு போட ஆளில்லாம
லைஃபு ஓடுதே.

நீ அம்சமான ஏஞ்சல்...
நான் அறுந்து போன ஊஞ்சல்...

January 12, 2015

செல்ஃபி

இன்றுதான்
பார்த்தேன்.

ஓவியம் ஒன்று
தன்னை
புகைப்படம்
எடுத்துக் கொள்வதை.

January 11, 2015

கவிதை

தேவ
பாவை உன்னை
பார்த்த கணத்தில்
தன்னை
எழுதிக் கொண்டது
கவிதை.

சாட்சிகள்

நீ
கருவில் பிறந்து
தெருவில் நடக்கும்
கவிதை
என்பதற்கு
ஏராளமான
சாட்சிகள் உண்டு.

ஓவியம்

எந்த தூரிகை
தந்த ஓவியம்
நீயடி?

உன்னுடையவை

எழுதுவது
நானாயிருப்பினும்
கவிதைகள்
உன்னுடையவை.

நினைவு

ஊடுருவுகிறது

உள் நினைவு
வரை
உன் நினைவு.

January 10, 2015

நயம்

உன்
பெயரில்
ஏதோ ஒர்
கவிதை நயம்
இல்லை?

புறம்

உள்ளும்
புறமும்
நீ.

January 8, 2015

பெண்பாவாய்

பொன்பாவாய்!
பூவிலும்
மென்பாவாய்!

நீதான் எனக்கு
ஆரமுதமாவாய்.

உள்ளிருக்கும்
உள்ளத்தில் நீயே
இன்பாவாய்.

பெண்பாவாய்!
வாழ்கிறாய் நீயே
நான் வடிக்கும்
வெண்பாவாய்.

மனதினில்
மலர்கிறாய்
செம்பூவாய்.

எப்போது
என் மேலே நீ
அன்பாவாய்?

அழகு

ரோஜாவின் இதழ்களை விட
உன்
இதழ்களின் ரோஜாக்களே
அழகு.