பொன்பாவாய்!
பூவிலும்
மென்பாவாய்!
நீதான் எனக்கு
ஆரமுதமாவாய்.
உள்ளிருக்கும்
உள்ளத்தில் நீயே
இன்பாவாய்.
பெண்பாவாய்!
வாழ்கிறாய் நீயே
நான் வடிக்கும்
வெண்பாவாய்.
மனதினில்
மலர்கிறாய்
செம்பூவாய்.
எப்போது
என் மேலே நீ
அன்பாவாய்?