January 8, 2015

பெண்பாவாய்

பொன்பாவாய்!
பூவிலும்
மென்பாவாய்!

நீதான் எனக்கு
ஆரமுதமாவாய்.

உள்ளிருக்கும்
உள்ளத்தில் நீயே
இன்பாவாய்.

பெண்பாவாய்!
வாழ்கிறாய் நீயே
நான் வடிக்கும்
வெண்பாவாய்.

மனதினில்
மலர்கிறாய்
செம்பூவாய்.

எப்போது
என் மேலே நீ
அன்பாவாய்?