January 29, 2015

உடைந்தது ஒரு உள்ளம்

தீயில்லை
ஒளியில்லை
இந்த யுகமும்
இருளென
ஆனதே.

நீயில்லை
உயிரில்லை
ஒரு ஜீவன்
வாடியே
போனதே.

ஜென்ம ஜென்மமாய்
தவிக்கிறேன்.

உன்னை
இழந்துமே
இருக்கிறேன்.

எண்ணம்
எங்கும்
உன்னை
வைப்பேன்
வானே.