January 30, 2015

பிரிவதேனோ

உயரமான கவிதை ஒன்று
உலகம் தாண்டி போகுதே...

துயரமான இதயம் ஒன்று
துகள்களாகிப் போனதே...

பகலும் போகுதே
இரவும் போகுதே
நீரில் கண்களும்
மூழ்குதே...

மனமும் தேயுதே
மயங்கி சாயுதே
மரணம் போலது
வாட்டுதே...

உயிரே!
உயிரே!
பிரிவதேனோ....

எனது நிலவும்
எரிவதேனோ...

நினைவே!
நினைவே!
மறந்ததேனோ...

எனது அமுதம்
விஷமேதானோ...