October 29, 2014

மெளன மொழி

மெளன மொழி பேசி
என் மனம் ஆள்கிறாய்.

ஆனால்
என் மனம் முழுக்க
உன்னைப் பற்றிய
பேச்சாகத்தான்
இருக்கிறது.

நீ ஆள்வதால்
நான் வாழ்கிறேன்.

பல்லக்கு

உன்
நினைவுப் பல்லக்கை
தூக்கி சுமக்கையில்
கனமே தெரிவதில்லை.

படை

அழகால் கொடி பிடித்து
விழியால் படை எடுத்து
வருகிற மானே!

எதிர்க்கும் எண்ணமில்லை
என்னில் வீரமில்லை - உன்
அடைக்கலம் நானே.

பார்ப்பேன்

பத்து மணிவரை
பணி பார்த்து
வீடு திரும்பும்

பாவை உன்னை
நீ போகும் பாதையில்
பார்ப்பேன்.

பனிமலராய் என்னுள்
பூப்பேன்.
 

October 17, 2014

பாலைநிலம்

வானமெங்கும் நீதானே
வாசமுள்ள பூந்தேனே!

மேகம் உன்னைக் காணாது
வாடுவதும் நான்தானே.

யாரு உண்டு தூது செல்ல
என் மனசின் சேதி சொல்ல

பாலைநிலம் வாடுதம்மா
பாவை உன்னை தேடுதம்மா

உள்ளமும் ரெண்டாச்சு
காரணம் பெண்ணாச்சு.

கண்ணீரும் தீயாச்சு
ஆனந்தம் போயாச்சு.

October 16, 2014

வலி

பூமி தேடி
தாவி வந்த
பொன்னோவியமே!

உனை நாடி
இரண்டடிகள்
முன்னோக்கி வைத்தால்
நான்கடிகள்
பின்னோக்கி செல்கிறேன்.

பெண்ணே!
என்னை
முன்னே இழுப்பதும் நீ
பின்னே தள்ளுவதும் நீ.

ஏதுமுண்டோ
என்னிடம்?

ஆட்டுவிப்பவள் நீயன்றோ.
ஆடும் பொம்மை நானன்றோ.

கேட்கிற இடத்தில்
நானிருக்கிறேன்.

கொடுக்கிற இடத்தில்
நீயில்லை.

விதி வலியது.
வலி கொடியது.

October 15, 2014

காணிக்கை

மகிழம்பூ மலரே!

நீ
வராது வந்த தாரகை.
உலா வரும் தூரிகை.

உன்
பூவசந்த தேகம்
ஆனந்த மேகம்.
பிரம்மன் செய்த
பிரத்யேக யாகம்.
காணக் கண் கோடி
வேண்டுகின்ற தாகம்.

யாரிவள்
இப்பூமகள்
என

தரை வந்த
பிறை
உன்னை

வையம் யாவும்
போற்றும்.

அதில்
கையும் கோர்க்கும்
காற்றும்.

காதல் நேரும் போது
காமம் அங்கு ஏது?

மாணிக்க மீனே!
மாலைத் தேனே!
காணிக்கை நானே
ஏற்பாய் மானே.
 

October 14, 2014

அதிசயம்

உன்னை நினைத்து
என்னென்ன
உளறிக் கொட்டினாலும்
கவிதையாகி விடுகிறது.

இது
விதி செய்யும்
அதிசயம்.
 

October 13, 2014

காய்ந்த பூமி

காய்ந்து கிடக்கும்
பூமியை பார்த்து
அமைதி காக்கும்
வானம் போல

மனம் தேய்ந்து கிடக்கும்
என்னை பார்த்தும்
அமைதியாய் கடக்கிறாய்.

என்றைக்கு
வானம் திறக்குமோ - உன்
வார்த்தை பிறக்குமோ?
 

October 12, 2014

உன் போக்கில்

என் போக்கில்
இருந்த என்னை

உன் போக்கில்
இழுத்துவிட்டாய்.

போகப் போகத்தான்
தெரியும்.

என்
பொழுது விடியுமோ
பொழுது முடியுமோ?
 

நிலாக்கள்

நேற்றுதான் படித்தேன்.

பிரபஞ்ச பால்வெளியில்
இருப்பது மொத்தம்
29 நிலாக்களாம்.

பூமிக்கு ஒரு நிலவாம்
நெப்டியூனுக்கும் ஒன்றாம்
செவ்வாய்க்கு இரண்டாம்
வியாழனுக்கு மூன்றாம்
யுரேனஸூக்கு நான்காம்
சனிக்கு ஒன்பதாம்

எனக்கு
நீ மட்டும்தான்.

October 9, 2014

ஆதாரம்

வெளிப்படுத்த
முடியாத
காதலெல்லாம்
கவிதையாகத்தான்
வெளிப்படுகிறது.

கவிதைக்கு ஆதாரம்
காதல்.

காதலுக்கு ஆதாரம்
நீ.

புத்தகம்

என்
இதயப்
புத்தகத்தின்
எல்லா பக்கங்களிலும்
எழுதப்பட்டிருப்பது

உன் பெயர்தான்.
 

October 8, 2014

திரும்ப திரும்ப

திரும்ப திரும்ப
படித்த புத்தகத்தை
திரும்ப திரும்ப
படிப்பதைப் போல

திகட்ட திகட்ட
நினைத்த உன்னை
திரும்ப திரும்ப
நினைக்கிறேன்.

October 7, 2014

நின்றுவிடும்

எழுதும்
எல்லா கவிதையும்
உனக்காகத்தான்.

வேண்டாம் என்று
நீ சொன்னால்
நின்றுவிடும்...

என் கவிதையும்
என் காற்றும்.

October 6, 2014

சாபம்

விசுவாமித்திர முனிவரோ
வசிஷ்ட மகரிஷியோ
துர்வாச முனியோ

யாரோ சாபமிட
பூமிக்கு வந்து
பிறந்த
தாரகை நீ.