மகிழம்பூ மலரே!
நீ
வராது வந்த தாரகை.
உலா வரும் தூரிகை.
உன்
பூவசந்த தேகம்
ஆனந்த மேகம்.
பிரம்மன் செய்த
பிரத்யேக யாகம்.
காணக் கண் கோடி
வேண்டுகின்ற தாகம்.
யாரிவள்
இப்பூமகள்
என
தரை வந்த
பிறை
உன்னை
வையம் யாவும்
போற்றும்.
அதில்
கையும் கோர்க்கும்
காற்றும்.
காதல் நேரும் போது
காமம் அங்கு ஏது?
மாணிக்க மீனே!
மாலைத் தேனே!
காணிக்கை நானே
ஏற்பாய் மானே.
நீ
வராது வந்த தாரகை.
உலா வரும் தூரிகை.
உன்
பூவசந்த தேகம்
ஆனந்த மேகம்.
பிரம்மன் செய்த
பிரத்யேக யாகம்.
காணக் கண் கோடி
வேண்டுகின்ற தாகம்.
யாரிவள்
இப்பூமகள்
என
தரை வந்த
பிறை
உன்னை
வையம் யாவும்
போற்றும்.
அதில்
கையும் கோர்க்கும்
காற்றும்.
காதல் நேரும் போது
காமம் அங்கு ஏது?
மாணிக்க மீனே!
மாலைத் தேனே!
காணிக்கை நானே
ஏற்பாய் மானே.