October 16, 2014

வலி

பூமி தேடி
தாவி வந்த
பொன்னோவியமே!

உனை நாடி
இரண்டடிகள்
முன்னோக்கி வைத்தால்
நான்கடிகள்
பின்னோக்கி செல்கிறேன்.

பெண்ணே!
என்னை
முன்னே இழுப்பதும் நீ
பின்னே தள்ளுவதும் நீ.

ஏதுமுண்டோ
என்னிடம்?

ஆட்டுவிப்பவள் நீயன்றோ.
ஆடும் பொம்மை நானன்றோ.

கேட்கிற இடத்தில்
நானிருக்கிறேன்.

கொடுக்கிற இடத்தில்
நீயில்லை.

விதி வலியது.
வலி கொடியது.