August 15, 2014

விழி பேசும் மொழி

தேவ மாதே

முன் வந்து
முகம் பார்த்து
வாய் திறந்து
வார்த்தை கோர்த்து
சொல்ல வேண்டுமா
காதலை.

விழி பேசாததையா
மொழி பேசிவிடப் போகிறது.

உயிர்க்குரல் பாடும்
ஒரு ராகம் -  நீ
கேட்பாயா.

மனதினை தந்து
என் ஜீவன் - அதை
காப்பாயா.