May 6, 2015

நானுணர்வது

நீயின்றி
நானுணர்வது
என் தனிமையையா?
என் வெறுமையையா?

April 23, 2015

விசித்திரம்

பிரிந்து நீ போன போதே
இறந்து நான் போனதையே
மறந்து போய்
உயிரோடிருக்கிறேனே.

இதென்ன
விசித்திரம்?

April 20, 2015

காதல்கள்

மணந்த காதல் போல்
மறந்த காதல் போல்
மரித்த காதல் போல்
மண்ணில் உண்டு -

மறைத்த காதல் –
மனதை மனதால்
மதித்த காதல் - தன்
மனதிற்கு
மட்டுமே கேட்கும்படி
உரைத்த காதல்.

என்னாவது?

வானமே இல்லையே.
வான்நிலா என்னாவது?
வருவதா போவதா
கேள்விகள் உண்டானது.

தீபமே இல்லையே.
திரிகளும் என்னாவது?
எரிவதா தணிவதா
கேள்விகள் உண்டானது.

வண்ணமே இல்லையே.
வானவில் என்னாவது?
வளைவதா கலைவதா
கேள்விகள் உண்டானது.

ஆழ்கடல் இல்லையே.
அலைகளும் என்னாவது?
அலைவதா மறைவதா
கேள்விகள் உண்டானது.

தேவியே இல்லையே.
கோவிலும் என்னாவது?
திறப்பதா அடைப்பதா
கேள்விகள் உண்டானது.

ஜீவனே இல்லையே.
தேகமும் என்னாவது?
வாழ்வதா வீழ்வதா
கேள்விகள் உண்டானது.

வாழ்வே!
இனி நீ
இல்லையே.

வாழ்வில்
இனி நான்
இல்லையே.

காதல் எனும்
வேதம் தினம்
பாடும் - என்
பாடலே.

April 17, 2015

கவிதை வராது

இன்று முதல்
என் கவிதை
வராது.

இன்று முதல்
என் 
கவிதை
வராது.

March 29, 2015

கண்ணீர் முகிலாய்...


ஏதோ ஒரு ராகம்
மனசின் உள்வீணையில்.
ஏனோ விழி நீரில்
நனைகின்ற ஜீவநாதம்.

தளரும் மனதோடு...
இடரும் நினைவோடு...

உயிர் காற்றாடும் சங்கே
உயிர் மீட்டாது வந்தே.

காற்றில் மின்னி மாயும் - விளக்கில்
ஏற்றி வைக்கும் தீபம்.
கங்கை ஆற்றில் எங்கு - கலக்கும்
வைகை ஆற்றின் நீரும்?

புனித யாத்ரை விரதம் போலே
பிரிவில் வாட்டும் விரகம்.

இருளில் பறந்து மொழி மாற்றிப் பாடுமொரு
பாவம் ஊமை குயிலாய்
நான்.

வெண்ணிலாவைப் போலே எனக்குள்
வெளிச்சம் தந்ததாரோ?

வர்ண ஜாலம் காட்டி வசந்தம்
வாங்கிப் போனதாரோ?

அன்பின் ஆத்ம ஹிருதயம் தேம்பும்
சிறகொடிந்த கிளியாய்.

மழை பெய்ய மண்ணில் அலை பாய்ந்து தேடுமொரு
பாவம் கண்ணீர் முகிலாய்
நான்.

March 12, 2015

பூஜைக்காக

பூஜை செய்ய
பூக்கள் வேண்டும்.

கொஞ்சம்
புன்னகை செய்
பூவே.

March 7, 2015

நாழிகைகள்

நீ
இல்லாமல்
நகர்கின்றன

என்
நாழிகைகள்.

March 6, 2015

காலம்

காலம் தாழ்த்தினால்
காதல் கருகிவிடும்.

உயிர் கொஞ்சம்
உள்ளே உருகிவிடும்.

நீ
தந்த பாடமடி.

மனசு

உன்னை
மறக்கச் சொல்லி

மன்றாடுகிறது
மனசில்லாத மனசு!

தேவ நிமிடங்கள்

தேவதையை பார்த்த
தேவதை கைகோர்த்த

அந்த
தேவ நிமிடங்கள்

மரண பரியந்தமும்
மறக்காது.

தாமரை

என்
இதயத்தின்
தாமரையில்
இருக்கும்
தாமரை
நீ.

March 5, 2015

தவம்

எங்கு நான் 
செல்வது...

உனக்கென 
தவமிருக்க...

நீ பறித்த...

நீ
பறித்த
பூ

என்
இதயம்.

கனவு

நனவாகாத
கனவு
எனத் தெரிந்தே
காண்கிறேன்

உனை நேசிப்பதாய்...

March 2, 2015

இடம் பெயர்ந்தால்

நீ
இடம் விட்டு
இடம் பெயர்ந்தால்

என்
இதயம்
இடம் விட்டு
இடம் பெயரும்.

பெண்ணிலா

வந்து போகும் வெண்ணிலா
என்னை பார்ப்பதுண்டு.

கண்கள் பார்த்த பெண்ணிலா
நின்று போனதின்று.

நான் செய்த பாவமே
என்ன செய்கிறாய்?

ஏழேழு ஜென்மமாய்
என்னைக் கொல்கிறாய்.

ராகம் எங்கு போனது?
தாளம் என்ன ஆனது?

ஊமை தானே
உருகிப் பாடுது.

ஊமை உள்ளம்
உயிரைத்தானே தேடுது.

February 24, 2015

இமைத்திட

இமைத்திரை விலக்கி
இருவிழி நகர்த்தி
இதமாய் பார்க்கிறாய்.
இமைத்திட மறக்கிறேன்.
இன்னொருமுறை பிறக்கிறேன்.

எதையும்

உனக்காக
மட்டும் நான்
இதயம் திறப்பேன்
எதையும் துறப்பேன்.

கவிதை

நீ ஒரு
குறுங்கவிதை.
நீயற்ற வாழ்வோ
அர்த்தமில்லா
வெறுங்கவிதை.

நினைவுப்பேழை

எடுக்க
எடுக்க
அடி காணமுடியா
நினைவுப் பேழைக்குள்
நீயும் நானும்!

மனக்கேதம்

என்
மனக்கேதம் தீர
உன்
மலர்ப் பாதம்
போதும்.

எங்கே போனது

எதிர் வரும் காதல் முல்லையே!
எனக்கெதிர் காலம் இல்லையே!

எனை நீங்கி தூரம் போகிறாய்!
எனக்குள்ளே பாரம் ஆகிறாய்!
தினந்தோறும் பார்வை
தந்து நெஞ்சம் தாக்கினாய்!

பார்த்துப் போன கண்கள் இங்கே
காணவில்லையே!
கோர்த்துப் போன கைகள் இங்கே
நீளவில்லையே!

பக்கம் வந்த பெண்மை இன்று
எங்கே போனது?
லட்சம் பூக்கள் கோர்த்த மாலை
என்ன ஆனது?

என் வானே நீதானே!
எங்கே வாழ்வேனே?

விண்மீனே நொந்தேனே!
எங்கே போவேனே?

February 15, 2015

உண்மையா

சில சமயங்களில்
உன்
இமைகளே உனைப் பார்த்து
இமைக்க மறக்கின்றதாமே.

உண்மையா?

உண்மையாகத்தானிருக்கும்.

முக்தி நிலை

பிரபஞ்ச பேரழகே!

தயவுசெய்து
தயவுசெய்து
மறுபடியும்
பிறக்காதே.

பிறந்து பிறந்து
என்னை நீ
வறுக்காதே.

முக்தி நிலை
அடைந்துவிடு
அல்லது
மோட்சத்தில்
கலந்து விடு.

February 10, 2015

தேசிய கீதம்

உனக்காகப் பாடும்
கவிதைகள் யாவும்

எனக்கென்னவோ
தேசிய கீதம்தான்.

உன்னிடத்தில்

உன்னை பார்த்ததில்லை.

உன்னோடு பேசியதில்லை.

இருந்தாலும் - என்
இருதயம்
உனக்காக
உருகித் தவிப்பதை
என்னென்று சொல்ல?

எடுத்துக் கொடுக்கும்படி
இருதயம்
இருந்திருந்தால்
எத்தனை நன்றாய்
இருந்திருக்கும்?

என்னைவிட்டு எடுத்திருப்பேன்.
உன்னிடத்தில் கொடுத்திருப்பேன்.

மழைக்காலம்

மழைக்காலம்.

மண்ணில் இல்லை.
விண்ணில் இல்லை.

கன்னி உன்னால் - என்
கண்ணில்.

February 8, 2015

சிருஷ்டி

உன்னுடைய
'நான்' இலிருந்து
என்னுடைய
'நான்'
கவிதையை
சிருஷ்டிக்கிறேன்.

விழிகள்

உன்
நினைவுகளில்
அமிழும்
புரியா பொழுதுகளில்
விழிகள்
வழிகின்றன.

தரிசனம்

இன்றைக்கும்
வரவில்லை நீ.

அது சரி.

வருவது
உனக்கு தினசரி.
எனக்கு தரிசனம்.

தேடல்

நிகழ்ந்த
யுகயுகமாய்
என்
நிரந்தர தேடல்
நீதானடி.

பார்வைக் காற்று

உரசிப் போகும்
பார்வைக் காற்றினில்
உள்ளம் பறிப்பவள்
நீ.

ப்ரக்ஞை

என்
ப்ரக்ஞையின்
அடிவாரத்தில்
உன் முகமே
பதிந்து
கிடக்கிறது.

தருணங்கள்

அழகான மயில்
அருகாமையில்
என மகிழ்ந்து

பேசாது பேசி
ஜீவித்திருந்த

தாமரை
தருணங்கள்
திரும்பி வாரா.

உனதோரம்

கரையோரம் தான்
அலைகள்.
இருந்தும்
கரை சேர்வதில்லை.

உனதோரம் தான்
நானும்.
இருந்தும்
உனை சேரவில்லை.

வார்த்தைகள்

தினம் உனை
பார்க்கையில்
நாக்கு நுனியில்
வார்த்தைகள்
துடிக்கின்றனவேயன்றி
வெளிவருவதில்லை.

February 2, 2015

மனக் கண்ணாடி

முன்வந்து நிற்கவில்லை
என்றாலும்
என் மனக் கண்ணாடியில்
உனதுருவே தான் தெரியும்
எனதுயிரே.

January 30, 2015

பிரிவதேனோ

உயரமான கவிதை ஒன்று
உலகம் தாண்டி போகுதே...

துயரமான இதயம் ஒன்று
துகள்களாகிப் போனதே...

பகலும் போகுதே
இரவும் போகுதே
நீரில் கண்களும்
மூழ்குதே...

மனமும் தேயுதே
மயங்கி சாயுதே
மரணம் போலது
வாட்டுதே...

உயிரே!
உயிரே!
பிரிவதேனோ....

எனது நிலவும்
எரிவதேனோ...

நினைவே!
நினைவே!
மறந்ததேனோ...

எனது அமுதம்
விஷமேதானோ...

January 29, 2015

உடைந்தது ஒரு உள்ளம்

தீயில்லை
ஒளியில்லை
இந்த யுகமும்
இருளென
ஆனதே.

நீயில்லை
உயிரில்லை
ஒரு ஜீவன்
வாடியே
போனதே.

ஜென்ம ஜென்மமாய்
தவிக்கிறேன்.

உன்னை
இழந்துமே
இருக்கிறேன்.

எண்ணம்
எங்கும்
உன்னை
வைப்பேன்
வானே.

January 27, 2015

காலடி ஒசை

காதலின்
காலடி ஒசை
கேட்கிறதே.

நீ
வருகிறாயோ?

January 23, 2015

என்போல்

நீயும் இங்கே 
இல்லையே.

நானும் என்போல் 
இல்லையே.

நகரும் நரகம்
காலமே.

கனவை மிதித்து
போகுமே.

கணங்கள் ரணமாய்
ஆகுமே.

தினங்கள் யுகமாய்
போகுமே.

January 20, 2015

திரைப்பாடல் 5

My own lyrics for the song UNKKENNA VENUM SOLLU from movie ENNAI ARINDHAAL...

முதல்வரி காதல் சொல்லும்
மறுவரி கவிதை சொல்லும்
இதுவரை நேராத
ஏதோ நேருமே.

விழிவழி காதல் பொங்கும்
மொழிவழி மெளனம் தங்கும்
கனிமொழி பாராத
கண்ணும் சோருமே.

கருவினில் பிறந்து வந்து
தெருவினில் நடந்து செல்லும்
ஒரு வரி கவிதை இங்கு
பெண்ணே நீதானே.

மழையென தூறிக் கொண்டு
மனதினை வாரிக் கொண்டு
மறைகின்ற காற்று இங்கு
பெண்ணே நீதானே.

உன்னை பார்க்கும் மதிய நேரம்
நெஞ்சம் வார்க்கும் புதிய ஈரம்.

நீ நிலவு எனக்கு தூரம்
உந்தன் நிழலே எனக்கு போதும்.

----

இருக்கின்ற ஒரு இதயம்
இழக்கின்ற நொடி கடினம்
இருப்பினும் அது நிகழும்
உன்னைக் கண்டாலே.

இயக்கங்கள் விலகிச் செல்ல
தயக்கங்கள் தழுவிக் கொள்ள
மயக்கங்கள் உயிரை கிள்ளும்
உன்னைக் கண்டாலே.

நீ செல்லும் வழியெல்லாம்
நினைவுகள் ஓடும் ஓ...
நீ சென்ற பின்னாலும்
இமைகளும் தேடும்...

தன தாரனத்தரநம்தம்...
தன தாரனத்தரநம்தம்...

January 16, 2015

திரைப்பாடல் 4

My own lyrics for the song MERUSALAYITEN from movie ‘I’….  :) :) :)

ஏண்டி என்ன கிராஸு பண்ண...
நானும் இப்போ கிராக்கு ஆனேன் பொண்ணே...
டாவடிச்சேன் உன்ன நீ டார்ச்சர் பண்ணியே
சாவடிச்ச என்ன....

நான் 
மெண்டலாயிட்டேன்
மெண்டலாயிட்டேன்
மெண்டலாயிட்டேன்
மெண்டலாயிட்டேன்

Stanza 1:

போட்டோ ஷாப்பு நீ
குவாட்டர் ஷாப்பு நான்
உள்ளுக்குள்ள உன்ன வச்சி
பூட்டிகிட்டேனே...

கோகோ கோலா நீ
கோலி சோடா நான்
பாட்டிலுக்குள் பளிங்குபோல
மாட்டிகிட்டேனே...

நீ ஈசியாரு ரோடு...
நான் ஏலம் போன வீடு...

Stanza 2:

ஜாதிமல்லி நீ
பூந்தமல்லி நான்
வாசனையும் நெஞ்சுக்குள்ள
வண்டி ஓட்டுதே

ஃபேஸுபுக்கு நீ
லூசுமக்கு நான்
லைக்கு போட ஆளில்லாம
லைஃபு ஓடுதே.

நீ அம்சமான ஏஞ்சல்...
நான் அறுந்து போன ஊஞ்சல்...

January 12, 2015

செல்ஃபி

இன்றுதான்
பார்த்தேன்.

ஓவியம் ஒன்று
தன்னை
புகைப்படம்
எடுத்துக் கொள்வதை.

January 11, 2015

கவிதை

தேவ
பாவை உன்னை
பார்த்த கணத்தில்
தன்னை
எழுதிக் கொண்டது
கவிதை.

சாட்சிகள்

நீ
கருவில் பிறந்து
தெருவில் நடக்கும்
கவிதை
என்பதற்கு
ஏராளமான
சாட்சிகள் உண்டு.

ஓவியம்

எந்த தூரிகை
தந்த ஓவியம்
நீயடி?

உன்னுடையவை

எழுதுவது
நானாயிருப்பினும்
கவிதைகள்
உன்னுடையவை.

நினைவு

ஊடுருவுகிறது

உள் நினைவு
வரை
உன் நினைவு.

January 10, 2015

நயம்

உன்
பெயரில்
ஏதோ ஒர்
கவிதை நயம்
இல்லை?

புறம்

உள்ளும்
புறமும்
நீ.

January 8, 2015

பெண்பாவாய்

பொன்பாவாய்!
பூவிலும்
மென்பாவாய்!

நீதான் எனக்கு
ஆரமுதமாவாய்.

உள்ளிருக்கும்
உள்ளத்தில் நீயே
இன்பாவாய்.

பெண்பாவாய்!
வாழ்கிறாய் நீயே
நான் வடிக்கும்
வெண்பாவாய்.

மனதினில்
மலர்கிறாய்
செம்பூவாய்.

எப்போது
என் மேலே நீ
அன்பாவாய்?

அழகு

ரோஜாவின் இதழ்களை விட
உன்
இதழ்களின் ரோஜாக்களே
அழகு.