My own lyrics for the song UNKKENNA VENUM SOLLU from movie ENNAI ARINDHAAL...
முதல்வரி காதல் சொல்லும்
மறுவரி கவிதை சொல்லும்
இதுவரை நேராத
ஏதோ நேருமே.
விழிவழி காதல் பொங்கும்
மொழிவழி மெளனம் தங்கும்
கனிமொழி பாராத
கண்ணும் சோருமே.
கருவினில் பிறந்து வந்து
தெருவினில் நடந்து செல்லும்
ஒரு வரி கவிதை இங்கு
பெண்ணே நீதானே.
மழையென தூறிக் கொண்டு
மனதினை வாரிக் கொண்டு
மறைகின்ற காற்று இங்கு
பெண்ணே நீதானே.
உன்னை பார்க்கும் மதிய நேரம்
நெஞ்சம் வார்க்கும் புதிய ஈரம்.
நீ நிலவு எனக்கு தூரம்
உந்தன் நிழலே எனக்கு போதும்.
----
இருக்கின்ற ஒரு இதயம்
இழக்கின்ற நொடி கடினம்
இருப்பினும் அது நிகழும்
உன்னைக் கண்டாலே.
இயக்கங்கள் விலகிச் செல்ல
தயக்கங்கள் தழுவிக் கொள்ள
மயக்கங்கள் உயிரை கிள்ளும்
உன்னைக் கண்டாலே.
நீ செல்லும் வழியெல்லாம்
நினைவுகள் ஓடும் ஓ...
நீ சென்ற பின்னாலும்
இமைகளும் தேடும்...
தன தாரனத்தரநம்தம்...
தன தாரனத்தரநம்தம்...