June 12, 2014

கவிதையும் காதலும்

தேவன் தந்த
தேவதையே!

விளையாட்டாய்த்தான்
ஆரம்பித்தேன்
உன்னை நினைத்து
கவிதை எழுத.

நாளாக
நாளாக
கவிதை பிறந்தது.

நானே அறியாமல்
காதல் பிறந்தது.

விளையாட்டு வினையானது
வினையானது சுகமானது.

நீயென்னை
கண்ட நாள் முதலாய்
நிழல்கூட
என்னோடு வருவதில்லை.
நிலவுகூட
கண்ணுக்குத் தெரிவதில்லை.

இதயம் இடம் மாறிவிட்டது
இலை போல் தரை மோதிவிட்டது.

என்ன சொல்லி
நானெழுத.
எப்படி உன்
மனமறிய.

கவிதையை சொல்லி விட்டேன்
காதலை சொல்லாமல் விட்டேன்.

இப்போதைக்கு
என்னோடு
இருப்பதெல்லாம்

சொல்ல முடிந்த கவிதையும்
சொல்ல முடியாத காதலும்.