June 24, 2014

ஒரு வார்த்தை

திருவே

ஒரு வார்த்தைதான்
பேசிக் கொண்டோம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்.

அதிலேயே
நூறாயிரம் வார்த்தைகள்
பேசி
ஓராயிரம் ஆண்டுகள்
வாழ்ந்ததாய்
அடைகிறது நிறைவை
என் உயிர்ப் பறவை.