பூ வைக்கும் பூவே
புன்னகைக்கும் தீவே
நடமாடும் நந்தவனமே
நான் பாடும் கீர்த்தனமே
வாசமுள்ள பூங்காற்றே
வசப்படுத்தும் தேனூற்றே
கார்கால பூ வசந்தமே
கண்டிராத தேவ சொந்தமே
அன்னம் வியக்கும் அன்னமே
பொன்னும் வியக்கும் சொர்ணமே
செந்தாழம்பு திருமேனியே உன்
செவ்விதழ் தேடி வரும் தேனீயே
கண்ணை விட்டு
விலகிடாத ஓவியமே
நெஞ்சம் விட்டு
நீங்கிடாத காவியமே
நீயோ
மண்ணை விட்டு
பூமி வந்த தாமரை
நானோ
யாருமற்று தள்ளி
நிற்கும் தேய்பிறை
நீயோ
வானம் விட்டு
வையம் வந்த தேவதை
நானோ
பாலைதன்னில் சிந்திச்
செல்லும் வான்மழை
புன்னகைக்கும் தீவே
நடமாடும் நந்தவனமே
நான் பாடும் கீர்த்தனமே
வாசமுள்ள பூங்காற்றே
வசப்படுத்தும் தேனூற்றே
கார்கால பூ வசந்தமே
கண்டிராத தேவ சொந்தமே
அன்னம் வியக்கும் அன்னமே
பொன்னும் வியக்கும் சொர்ணமே
செந்தாழம்பு திருமேனியே உன்
செவ்விதழ் தேடி வரும் தேனீயே
கண்ணை விட்டு
விலகிடாத ஓவியமே
நெஞ்சம் விட்டு
நீங்கிடாத காவியமே
நீயோ
மண்ணை விட்டு
பூமி வந்த தாமரை
நானோ
யாருமற்று தள்ளி
நிற்கும் தேய்பிறை
நீயோ
வானம் விட்டு
வையம் வந்த தேவதை
நானோ
பாலைதன்னில் சிந்திச்
செல்லும் வான்மழை