வானில் நீலமில்லை
வாழ்வும் நீளவில்லை
காற்றில் ஈரமில்லை
கருமேகம் தூறவில்லை
வானவில்லில் வண்ணமில்லை
வானில் வர எண்ணமில்லை
கடலில் அலையில்லை
கரையோரம் அவையில்லை
நிலவில் பிறையில்லை
நிலத்தில் தரையில்லை
காலம் ஓடவில்லை
கானம் பாடவில்லை
நிமிடங்கள் நகரவில்லை
வருடங்கள் வளரவில்லை
இமைகள் அசையவில்லை
இயங்க இசையவில்லை
இதயம் இயங்கவில்லை
இறக்க தயங்கவில்லை
இரவில் இரவில்லை
பகலில் பகலில்லை
இயற்கை இதமாயில்லை
எதுவும் இயல்பாயில்லை
உடம்பில் உயிரில்லை
உயிரில் உயிரில்லை
இதற்கெல்லாம்
காரணம்
என்னருகில்
என்னுயிரே
நீ இல்லை.
வாழ்வும் நீளவில்லை
காற்றில் ஈரமில்லை
கருமேகம் தூறவில்லை
வானவில்லில் வண்ணமில்லை
வானில் வர எண்ணமில்லை
கடலில் அலையில்லை
கரையோரம் அவையில்லை
நிலவில் பிறையில்லை
நிலத்தில் தரையில்லை
காலம் ஓடவில்லை
கானம் பாடவில்லை
நிமிடங்கள் நகரவில்லை
வருடங்கள் வளரவில்லை
இமைகள் அசையவில்லை
இயங்க இசையவில்லை
இதயம் இயங்கவில்லை
இறக்க தயங்கவில்லை
இரவில் இரவில்லை
பகலில் பகலில்லை
இயற்கை இதமாயில்லை
எதுவும் இயல்பாயில்லை
உடம்பில் உயிரில்லை
உயிரில் உயிரில்லை
இதற்கெல்லாம்
காரணம்
என்னருகில்
என்னுயிரே
நீ இல்லை.