உன்னோடு பேசாமலிருக்கலாம்
ஒருமுறைக்கு மேல்
உன் விழி பாராமலிருக்கலாம்
ஆனாலும்
நெஞ்சமெல்லாம்
நீதான்
நீதான்
நீதான்
மேல்மனத்தில் இருக்கும்
ஆயிரம் சஞ்சலங்கள்.
ஆழ்மனத்தில் அசையாமல்
உன் நினைவே
உன் உருவே
என் திருவே!
கண்ணருகில் நீயிருக்க
கவலையின்றி நானிருக்க
கண்ணாக நீயிருக்கும் - கனவு
நனவாவதுவும் எக்காலம்?
ஒருமுறைக்கு மேல்
உன் விழி பாராமலிருக்கலாம்
ஆனாலும்
நெஞ்சமெல்லாம்
நீதான்
நீதான்
நீதான்
மேல்மனத்தில் இருக்கும்
ஆயிரம் சஞ்சலங்கள்.
ஆழ்மனத்தில் அசையாமல்
உன் நினைவே
உன் உருவே
என் திருவே!
கண்ணருகில் நீயிருக்க
கவலையின்றி நானிருக்க
கண்ணாக நீயிருக்கும் - கனவு
நனவாவதுவும் எக்காலம்?