நெஞ்சுக்குள் நீயும் வந்து
பஞ்சுக்குள் வைத்த தீயாய்
கவிதைகள் பல
தந்து போனாய்.
கனவில் நிதம்
வந்து போனாய்.
எண்ணத்தில் உன்னைக் கண்டேன்
வண்ணத்தில் நிலவைக் கண்டேன்
கன்னி உன்
கண்கள் கண்டால்
கற்பனை ஓடி வரும்.
காதலும் தேடி வரும்.
எனக்குள்ளே நுழைந்துவிட்டாய்.
இதயத்தை இழந்துவிட்டேன்.
என்னை நான் தேடுகின்றேன்
ஏதேதோ பாடுகின்றேன்.
பஞ்சுக்குள் வைத்த தீயாய்
கவிதைகள் பல
தந்து போனாய்.
கனவில் நிதம்
வந்து போனாய்.
எண்ணத்தில் உன்னைக் கண்டேன்
வண்ணத்தில் நிலவைக் கண்டேன்
கன்னி உன்
கண்கள் கண்டால்
கற்பனை ஓடி வரும்.
காதலும் தேடி வரும்.
எனக்குள்ளே நுழைந்துவிட்டாய்.
இதயத்தை இழந்துவிட்டேன்.
என்னை நான் தேடுகின்றேன்
ஏதேதோ பாடுகின்றேன்.