September 13, 2014

திரைப்பாடல் 3 - உசுர ஒத்த உசுர

My Own lyrics for the song OSAKA SETHA OSAKA from VANAKKAM CHENNAI movie.....

தேடி பாத்தேனே
தேசம் எல்லாமே
தேவத போனத பாக்கவில்ல.

தேதி போனாலும்
சேதி வரவில்ல
தேயாத என் நெஞ்சம் பூக்கவில்ல.

எனக்கே என்ன புரியாம
கவித பாடி தொலச்சேனே.
பாஸா ஃபெயிலா தெரியாம
லூஸா மாறி சிரிச்சேனே.

உசுர ஒத்த உசுர
உருவி மாலையா
ஆக்கித்தான் போட்டுகிட்டா.

உசுர ஒத்த உசுர
அருவி நீராட்டம்
தரையெல்லாம் வழியவிட்டா.

Stanza 1:
ஏன்டி பொறந்த
பேசா மடந்த
கண்ணால பாத்தேயென்
நெஞ்ச தொறந்த.

ஆச பெருசு
ஆயுள் சிறுசு
ஆனாலும் கேக்காதே
ஆடும் மனசு.

நீ எதுக்காக வந்த புள்ள..........

நீ எதுக்காக வந்த புள்ள
எதுக்கால வந்த தொல்ல
கணக்காக என்ன ஏன்டி
களவாடுற.

ஒன்ன பாத்து தொலஞ்சேனே.
ஊசக் காத்தா அலஞ்சேனே.
என்ன நானே பிரிஞ்சேனே.
எல்லாம் மாயம் அறிஞ்சேனே.

உசுர ஒத்த உசுர
உருவி மாலையா
ஆக்கித்தான் போட்டுகிட்டா.

உசுர ஒத்த உசுர
அருவி நீராட்டம்
தரையெல்லாம் வழியவிட்டா.