September 30, 2014

எக்காலம்

உன்னோடு பேசாமலிருக்கலாம்
ஒருமுறைக்கு மேல்
உன் விழி பாராமலிருக்கலாம்

ஆனாலும்
நெஞ்சமெல்லாம்
நீதான்
நீதான்
நீதான்

மேல்மனத்தில் இருக்கும்
ஆயிரம் சஞ்சலங்கள்.
ஆழ்மனத்தில் அசையாமல்
உன் நினைவே
உன் உருவே
என் திருவே!

கண்ணருகில் நீயிருக்க
கவலையின்றி நானிருக்க

கண்ணாக நீயிருக்கும் - கனவு
நனவாவதுவும் எக்காலம்?