July 6, 2014

மடிக்கணிணி

என்ன தவம்
செய்ததோ
அந்த மடிக்கணிணி.

எப்போதும் உன்
கையோடு
கண்ணோடு

முப்போதும்
உன்னோடு
வசிக்கிறது.

தவமே செய்யாமல்
மோட்சம் ருசிக்கிறது

உன்
விழி பட்டு
விரல் தொட்டு.