July 2, 2014

பிறந்த நாள் கவிதை

ஆனந்தமே
பரமானந்தமே
என்று

ஆனந்தக் கூத்தாடுகிறது
என் உள்ளம்.

புதிதாய் ஓரு
கவிதை
வந்ததால்
உள்ளமெல்லாம்
மகிழ்ச்சி வெள்ளம்.

காரணமின்றியா
கவிதை பிறந்தது?

கவிதை பிறந்ததால்
கவிதை பிறந்தது.