July 9, 2014

நான் வரைந்த ஓவியம்

உன்னை கண்ட
பின்புதான்
என்னை கண்டு
கொண்டேன்.

என்னை கண்ட
பின்புதான்
காதல் கண்டு
கொண்டேன்.

ஏன் ராணி என்னை நீ
ஏங்கச் செய்கிறாய்.

கண்ணீரை கண்ணிலே
தேங்கச் செய்கிறாய்.

நான் வரைந்த ஓவியம்
காணவில்லை உன் திருமுகம்.

ஓவியத்தில் உயிருமில்லையே
ஓவியனில் உணர்வுமில்லையே.