July 18, 2014

தேவதைக்காக ஓரு பிரார்த்தனை


தலையை குனிந்து வரும்
தாமரை
வாடலாமா.

ஆனந்தம் தரும்
ஸ்ரீ ராகம்
சோக கீதம்
பாடலாமா.

தேவமகள் இன்று
தேய்பிறையாய்
ஆகலாமா.

நலிவுற்றதால் முகம்
பொலிவற்று
போகலாமா.

மேகம் நோயுற்றதால்
தேகம் என்ற நீரூற்று
காயலாமா.

பகலில் வரும்
பெளர்ணமி நிலா
தேயலாமா.

இதையெல்லாம்
கண்டு என்மனம்
நோகலாமா.

இதயம் சிந்துகிறது
செந்நீர்.
இமையில் வழிகிறது
வெந்நீர்.

கருணையே வடிவான
திருவே!

நான் காதலிக்கும்
குருவே!

எந்தை வருக
எனதாருயிர் வருக

விசிறி கொண்ட
கையாலே
விசிறுங்கள்.

வினையாலே வந்த
வினையெல்லாம்
விரட்டுங்கள்.

மங்கையவள் நோய்தீர
மயிலிறகால் வருடுங்கள்.

தாய் போன்ற பெண்மையின்
நோய் தீர்த்து அருளுங்கள்.

நோய் நோய் படட்டும்.
உங்கள் ஆசியெனும்
தீ அதை சுடட்டும்.

பணிகிறேன் நான்
உங்கள் பாதம்.
அதுதானே என்றும்
எந்தன் வேதம்.

பாவை ஆகட்டும்
பழையபடி.
படர்ந்து பூக்கட்டும்
பருவக்கொடி.